பெண்குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றவருக்கு ஜாமீன்!

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் பூ மேட்டு தெரு எனும் தெருவை சேர்ந்த தவமணி சித்ரா என்னும் தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் அண்மையில் கர்ப்பிணியாக இருந்த சித்ராவுக்கு  நான்காவது பெண் குழந்தை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி பிறந்துள்ளது.

இந்த நான்காவது பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து பாண்டியம்மாள் கொலை செய்துள்ளார். இந்த காரணத்தால் பாண்டியம்மாள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில், தற்பொழுது மனுவை விசாரித்த நீதிபதிகள் வயது முதிர்வு காரணமாக பாண்டியம்மாவுக்கு ஜாமின் வழங்கி உள்ளனர்.

author avatar
Rebekal