மருமகன்களுடன் தகாத உறவு..! எச்சரித்த உறவினரை கொலை செய்த பெண்..!

ஆந்திராவின் குண்டூர் பகுதியில் ஒரு தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் இருவருக்குமே அந்த தம்பதியினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் மருமகன்களுடன், மாமியாருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த அப்பெண்ணின் கணவர் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசம் செய்து விட வேண்டாம் என மனைவி எச்சரித்துள்ளார். ஆனால் கணவரின் பேச்சை கருத்தில் கொள்ளாமல் மீண்டும் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இதனால் ஒரு கட்டத்தில் மனம் உடைந்த அப்பெண்ணின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலை செய்து கொண்டவரின் உறவினரான சீனிவாசன் என்பவர் அப்பெண்ணிடம் , இரு மருமகளுடனும் சந்தித்து எச்சரித்து வந்து உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அந்த பெண்  தனது மருமகன்கள்  உதவியுடன் ஆகஸ்ட் 9-ம் தேதி சீனிவாசனை படுகொலை செய்துள்ளார். சீனிவாசன் இறந்த சில நாள்களுக்கு பிறகு சீனிவாசன் மனைவி சுகுனாம்மா தனது கணவரின் கொலைக்கு காரணம் அப்பெண்ணும் , அவரின் மருமகன்கள்  என போலீசாரிடம்  புகார் கொடுத்தார்.
இதை தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அப்பெண்ணின் உறவினர்கள் சுகுனாம்மாவிடம் சென்று கொடுத்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என மிரட்டியுள்ளனர். தற்போது இந்த விவரத்தையும் சுகுனாம்மா புகாராக போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

author avatar
murugan