வரலாற்றில் இன்று(05.04.2020)…. கல்வி வள்ளல் அழகப்பா செட்டியார் மறைந்த தினம் இன்று….

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடிக்கு  அருகில் உள்ள கோட்டையூரில்  பிறந்த மகான் என்றும் காரைக்குடியின் கல்வி கடவுள், பல அறிஞர்களை உருவாக்கிய ஆசான் , கல்வி தந்தை எனபோற்றப்படுபவர் அழகப்பா செட்டியார் ஆவர். இவர், காரைக்குடியின் கோட்டையூரில் ஏப்ரல் மதம்  06ஆம் நாள்  1909ஆம் ஆஅண்டு  பிறந்தார், இவரது குடும்பம் மிகவும் பாரம்பரியமான நாட்டுகோட்டை நகரத்தார் சமுதாயம் , அவரது பள்ளி படிப்பு காரைக்குடியில் அமைந்து உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் மேல் நிலை பள்ளியில் தொடக்க பள்ளி படிப்பை முடித்தார்.  பின் உயர் கல்வியே ( மெட்ராஸ் ) சென்னையில் படிக்கிறார் , பின்பு தனது 21 வயதில் கல்லூரி மேற் படிப்பை லண்டன் படிக்கிறார் , லண்டன் படித்து முடித்து விட்டு இந்தியா வந்து தொழில் தொடங்குகிறார் ,கேரளாவில் பஞ்சுஆலை தொழில் ,மலேசியாவில் ரப்பர் தொழில் ,பம்பாய் , மெட்ராஸ் , கல்கட்டா போன்ற நகரங்களில் தொழில் செய்து மிக பெரிய இந்திய தொழில் அதிபராக திகழ்கிறார் , பின்பு ஒரு நாள் மெட்ராஸ் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது , பின்பு அந்த மெட்ராஸ் பல்கலைக்கழகதிற்கே துனை வேந்தராக தேர்வு செய்ய படுகிறார் , அவ்வாறு துணைவேந்தராக இருக்கும் காலத்தில் ஏன் ? நாம் பிறந்த மண்ணிற்கு  ஒரு கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க கூடாது என்று நினைக்கிறார் , எனவே, காரைக்குடியில் ரயில்வே பிடர் ரோட்டில் இடம் தேர்வு செய்ய பட்டு அங்கு கல்லூரி கட்டபட்டு அதற்கு காந்தி மாளிகை என்று பெயர் வைத்தார் , காந்தி மாளிகை அரசு கலை கல்லூரியாக இயக்கபட்டது , அந்த கல்லூரி  தற்பொழுது  காந்தி மாளிகை அரசு மருத்துவமனையாக இயங்கி வருகிறது) . பின்பு அங்கிருந்த வேறு இடம் சுமார் 300 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு தற்போது இயங்கி வரும் இடத்தில் சகல வசதிகளுடன் அரசு கலை கல்லூரி கட்டபட்டு இயங்கி வருகிறது , அதன்பின், 1985 ஆண்டு அரசால் அந்த கல்லூரி பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது . அன்றைய பாரத பிரதமர் ஐவகர்லால் நேரு அவர்களின் அறிமுகம் அழகப்பர் அவர்களுக்கு கிடைத்து அந்த நட்பின் அடிபடையில் காரைக்குடியில் ( CECRI ) Central Electro chemical Recherche Limited என்ற மத்திய அரசு நிறுவனம் அமைப்பதற்கு  வள்ளல் அழகப்பர் அவர்கள் தன் கோட்டையூர் கிராமத்திற்கு உட்பட்ட புஞ்சை நிலங்கள் மற்றும் சிவகங்கை மன்னர் சமாதானதிற்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் நிலங்கள் மற்றும் அன்றைய பணம் மதிப்பில் சுமார் ஒரு லட்சம்  ரூபாய் பணமும் ( one lakhs ) மத்திய அரசுக்கு கொடுத்து CECRI நிறுவினார் . எனவே இவரை இப்பகுதி மக்கள் காரைக்குடியின் கல்வி கண் , கல்வி தந்தை என அழைக்கின்றனர். இத்தகைய மாண்பு மிகுந்த இவர், 1957ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம்  05 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். 1957 ஆண்டு இந்த உலகை விட்டு சென்று விட்டார். இதில்  மிகவும் அதிசயமான விசயம் பிறப்பும் இறப்பும் அடுத்து அடுத்த நாள் என்பது வள்ளல் பிறந்தது ஏப்ரல் 06 வள்ளல் இறந்தது ஏப்ரல் 05 என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kaliraj