நாளை முதல் 11-ம் தேதி வரை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை ..!

அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை வழங்க இருப்பதால் நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.அதிலும் முக்கிய  வழிபட்டு தலங்கள் , மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து அயோத்தி , மதுரா ஆகிய பகுதிகளில் உச்சகட்ட  பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளி , கல்லூரி மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் நாளை முதல் 11-ம் தேதி வரை விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது.

author avatar
murugan