அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு ! தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு ! தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுளள்து.
அயோத்தி வழக்கில்  தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில்  அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள்.முக்கிய வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

Join our channel google news Youtube