அயோத்தி வழக்கு ! அமைதியை கடைபிடிக்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னர் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில்  தீர்ப்பு இன்று  அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புகள்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கினாலும் ,அந்த தீர்ப்பு யாருக்கும்  வெற்றியும் அல்ல ,தோல்வியும் அல்ல.தீர்ப்பு வெளியான பின்னர் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.அனைத்து தரப்பினரும் சமூக நல்லிணக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.