அயோத்தி வழக்கு..! கர்நாடகா, ஜம்மு ,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை ..!

அயோத்தி வழக்கு..! கர்நாடகா, ஜம்மு ,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை ..!

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரபிரதேசத்தில் இன்று முதல் திங்கள் வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து  கர்நாடகா, ஜம்மு மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன. மேலும்  டெல்லியில் கூட அனைத்து அரசுப் பள்ளிகளும் , பல தனியார் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஏனெனில் இது இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனைத்து தனியார் பள்ளிகளும் இன்று மூடப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube