நிர்பயா குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனு மார்ச் 2ம் தேதி விசாரணை.!

நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனு மார்ச் 2ம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்