திறந்த வெளியில் துப்புவதை தவிர்க்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் மோடி தனது நட்டு மக்களுக்கு திறந்த வெளியில் அல்லது பொது இடங்களில் துப்புவதை தவிர்த்து குப்பை தொட்டிகளில் துப்புங்கள் என ஆலோசனை கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாழ்;ஆய்விரித்து ஆடுகிறது. இந்தியாவிலும் குறைந்த நிலை இல்லை. இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவினை கட்டுப்படுத்த நாட்டின் பிரதமர் மோடி நேற்று அதாவது வியாழக்கிழமை மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் படி, திறந்த வெளியில் அல்லது பொது இடங்களில் நடந்து செல்கையில் கண்டா இடங்களில் துப்புவதை தவிர்த்து குப்பை தொட்டிகளில் துப்புங்கள்.

வெளியில் செல்கையில் முகக்கவசம் அணிவதை வழக்கப்படுத்துங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் புதிதாக தோன்றியுள்ள பழக்கமாகிய அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை இனியும் மறக்காமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்துங்கள். இந்த பழக்கவழக்கங்கள் நமது கலாச்சாரத்தில் ஒன்றாக மாற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal