முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட தலித் நபர் கவுரக்கொலை ..!

தலித் சமூகத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் சையத் அர்ஷினி என்னும் முஸ்லிம் பெண் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் காதலித்து, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்களது திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் அது வெளியில் அவ்வளவாக காட்டி கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 9 மணி அளவில் முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாகராஜூ எனும் … Read more

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் என்சிபி தலைவர் ரேஷ்மா ஆகியோருக்கு 3 மாத சிறை தண்டனை ..!

குஜராத் மாநிலத்தில் உள்ள தலித் சமுதாய மக்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வருபவரும், எம் எல் ஏவுமாகிய ஜிக்னேஷ் மேவானி அவர்கள் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். கடந்த மாதம் இவர் இரு முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேறி உள்ளார். கோட்சேவுடன் பிரதமரை ஒப்பிட்டு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியேறிய அன்றைய தினமே, பெண் காவலர் ஒருவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக … Read more

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் சென்றடைந்தார் அமித்ஷா …!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலுக்குப் பின்பதாக தற்பொழுது முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அமித்ஷாவின் இந்த வங்கத்து பயணம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காவும், மாநில பாஜக கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் தான் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 5 ஆம் தேதி ஆம் தேதி இரவு … Read more

இன்னும் இரு குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியாக இருங்கள் – கோலிக்கு டேவிட் வார்னர் அறிவுரை..!

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரக்கூடிய விராட் கோலி அவர்கள் தொடர்ச்சியாக குறைவான ரன்களை மட்டுமே எடுத்து வருகிறார். அண்மையில் இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மட்டும் அதிக அளவில் ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி தொடர்ந்து குறைந்த அளவிலான ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வருவதால் அவர் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக் … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி இன்னும் இரு வருடங்களுக்கு நீடிக்கும் – நிதி அமைச்சர் அலி சப்ரி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை அதிக அளவில் உயர்ந்து காணப்படுவதுடன், மின் தடையும் இலங்கையில் பல மணி நேரங்கள் காணப்படுகிறது. கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கையில் சுதந்திரம் கிடைத்த தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தான் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுபின்பதாக . எனவே இலங்கையில் உள்ள அரசாங்கத்தை ராஜினாமா செய்யக்கோரி இலங்கை பொது மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி … Read more

உக்ரைன் ஆண்கள் மற்றும் சிறுவர்களை கற்பழிக்கும் ரஷ்ய படையினர் – ஐநா அதிகாரிகள் தகவல் !

உக்ரைன் நாட்டில் ரஷ்யா  கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் உக்ரைனிலுள்ள சிறுமிகளை ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்து வருவதாக செய்திகள் வெளியாகி பலரது கண்டனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தினரால் அரங்கேறும் மேலும் கொடுமையான ஒரு விஷயம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அதாவது ரஷ்ய ராணுவத்தினரால் உக்ரைனிலுள்ள பெண்கள், சிறுமிகள் மட்டுமல்லாமல் ஆண்கள் மற்றும் சிறுவர்களும் பலாத்காரம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என ஐநா அதிகாரிகள் … Read more

காற்று நிரப்பும் பொழுது புல்டோசர் டயர் வெடித்து விபத்து – இருவர் பலி!

ராய்ப்பூரில் உள்ள கன்குல் ஸ்டீலில் காற்று நிரப்பும் பொழுது புல்டோஸரின் டயர் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். சில்தாரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரு இளைஞர்கள் புல்டோஸரின் தாயாருக்கு காற்று நிரப்பியுள்ளனர். திடீரென அந்த தயார் வெடித்ததில் இருவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துமுள்ளனர். உயிரிழந்தவர்கள் இருவரும்  ராஜ்பால் சிங் மற்றும் பிரஞ்சன் நாம்தேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் மத்திய பிரேஷின் சாத்யாவில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜெய் பீம் பட தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவிட நீதிமன்றம் உத்தரவு ..!

ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் பீம். இந்த திரைப்படம் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்ததாக பாமக வன்னியர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து இந்த படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது. மேலும் இந்த … Read more

பலாத்கார புகாரளிக்க சென்று சிறுமியை பலாத்காரம் செய்த காவல் நிலைய அதிகாரி கைது …!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சைல்டு லைன் குழுவிடம் தெரிவித்திருந்ததையடுத்து காவல் நிலைய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட்டுள்ளதாகவும், அவரை சஸ்பெண்டு செய்ய  உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. … Read more

மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையை கடித்த எலி .., விசாரணை நடத்த உத்தரவு …!

ஜார்க்கண்ட் மாநிலம்  கிருதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையின் முழங்கால் மற்றும் கைகளில் எலி கடித்துள்ள சம்பவம் அரங்கேறி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த மே இரண்டாம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததால், அருகிலுள்ள  தான்பாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக … Read more