ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி..!

PM Modi UAE visit

2 நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். டெல்லியில் இருந்து 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:30 மணிக்கு அபுதாபிக்கு பிரதமர் சென்றடைகிறார். இதைத்தொடர்ந்து, இன்று மாலை (அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி) அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் இந்திர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். அவரது நிகழ்ச்சிக்கு அஹ்லன் மோடி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், … Read more

JEE Main 2024: ஜேஇஇ மெயின் தேர்வு முடிகள் வெளியானது..!

JEE Main 2024

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.  இந்தத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐஐடி கல்லூரிகளில் சேரலாம். JEE முதன்மை முடிவுகள் இன்று வெளியானது. JEE முதன்மை தேர்வில் பங்கேற்ற … Read more

டெல்லி எல்லை பதற்றம்… டெல்லி சென்ற விவசாயிகள் கைது ..!

farmer protest

கடந்த முறை விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், இம்முறை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு சட்டப்படி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தங்களது கோரிக்கையை ஏற்கவிட்டால் இன்று காலை 10 மணிக்கு  பல்வேறு மாநில விவசாயிகள் டிராக்டர் மூலம் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்து … Read more

சட்டப்பேரவையில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானம்..!

Vijayakanth

நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுதமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். இதைத்தொடர்ந்து,  சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு  கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அபாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  இன்று  … Read more

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை..!

Jactogeo

ஜனவரி 7ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில்பழைய டென்ஷன் திட்டம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழைய டென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். … Read more

வடசென்னை.! உங்கள் தொகுதி.. உங்கள் பார்வைக்கு….!

North Chennai

வட சென்னை மக்களவைத் தொகுதி 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் இராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்கு பிறகு பெரம்பூர் பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. வடசென்னை தொகுதி திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. காரணம் திமுக இதுவரை 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும்,  அதிமுக ஒரு முறையும், சுயேட்சை வேட்பாளர் … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி!

NITISH KUMAR

பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பின் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். பின்னர் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த மாதம் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள … Read more

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் விளக்கம்..!

R. N. Ravi

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி  சட்டபேரவையில் கூட்டம் தொடங்கும் போதும் , முடியும் போதும் தேசிய கீதம் பாடவேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்க்கப்படவில்லை என தெரிவித்து வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை  வாசித்தார். பின்னர் தமிழகத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட போது உரிய நிதியை மத்திய அரசு … Read more

முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி..!

Rajeshdas

2021-ல் அப்போதைய முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம்  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை … Read more

உப்பு சப்பில்லாத உரை; ஊசிப்போன உணவு பண்டம்-இபிஎஸ்..!

M. K. Stalin

நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு  கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அபாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. … Read more