அதிர்ச்சி : பொது குழுவுக்கு வந்த இருவர் சாலை விபத்தில் பலி..!

திருவண்ணாமலையில் இருந்து பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக வந்த வேன் மீது லாரி மோதி விபத்து.  இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்றில் வந்தனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில் செல்லும் பொழுது எதிர் சாலையான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் … Read more

துரோகம் செய்த ஓபிஎஸ் இனி கட்சிக்கு தேவையா?’ – முன்னாள் அமைச்சர் தங்கமணி

இந்த இயக்கத்தை அழித்துவிடவேண்டும் என்று ஓபிஎஸ் செயல்படுகிறார்; இவ்வளவு துரோகம் செய்தவர் இனி கட்சிக்கு தேவையா என சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு.  அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள் பேசுகையில், இந்த இயக்கத்தை அழித்துவிடவேண்டும் … Read more

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்நிலையத்தில் புகார்..!

அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்நிலையத்தில் புகார்.  அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுக  அலுவலகத்தில் உள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே … Read more

கட்டாலங்குளத்துக் காவிய நாயகன் புகழ் வாழ்க! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.  இன்று மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘மாவீரன் அழகு முத்துக்கோன் – உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம்! 18-ஆம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா இடமும் – மங்காப் புகழும் கொண்ட அரிமா நெஞ்சம் அவரது! கட்டாலங்குளத்துக் … Read more

இன்று மாலை 5 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று மாலை 5 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக தகவல்.  சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன்  தலைமையில்,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் … Read more

அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ள ஆவணங்களை கைப்பற்றி வாகனத்தில் ஏற்றிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..!

அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.  சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன்  தலைமையில்,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு … Read more

#BREAKING : பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே..!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர் என பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி உள்ளனர். இலங்கையில், தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்ஷே தனது ராஜினாமா குறித்து பிரதமர் ரனிலுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

தொடங்கியது பொதுக்குழு கூட்டம்..! ஓபிஎஸ் கலந்து கொள்வாரா..?

அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை.  சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன்  தலைமையில், செயற்குழு கூட்டம்நடைபெறுகிறது. அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் … Read more

#BREAKING : பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு – ஜூலை 11 காலை 9 மணிக்கு உத்தரவு!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் உத்தரவு வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.  அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் வாதம் நடைபெற்றது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் உத்தரவு வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

ஒருங்கிணைப்பாளர் பதவி காலி என்பது தவறாது – ஓபிஎஸ் தரப்பு

ஒட்டுமொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி மட்டும் காலி என எப்படி கூற முடியும் என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்.  அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய கூடுதல் மனுக்களை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் … Read more