விளையாட்டு உலகை ஒருகை பார்த்த கொரோனா ! ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று  முதல் ஒருநாள் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது.இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தான் .இதன் விளைவாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதாவது எஞ்சியுள்ள 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும்  ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .