புரோட்டா கடையில் வயிறு பிடிக்க சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் அடிக்கிறார்கள்….. திமுகவை விமர்சித்த பழனிசாமி…..

  • வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
  • புரோட்டா கடையில் வயிறு பிடிக்க சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் அடிக்கிறார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர் 15 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த திமுக திருவண்ணாமலை தொகுதிக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், தங்களது குடும்பம் பலனடைவதற்கு தான் தங்களது வெற்றியை பயன்படுத்துவார்கள் என்றும், திமுக கொள்கையில்லாத கூட்டணி என்றும், புரோட்டா கடையில் வயிறு பிடிக்க சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் அடிக்கிறார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment