ஆசிய கோப்பை 2018:பழி தீர்க்கப்போவது இந்தியாவா ?பாகிஸ்தானா ?தொடங்குகிறது போட்டி ..!

இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.

ஏற்கனவே, ‘லீக்’ ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி இருந்தது. இதனால், வெற்றிப் பயணத்தை தொடரும் நம்பிக்கையில் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம், லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது.இன்னும் சிறிது நேரத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது.

Leave a Comment