நயன்தாரா, டாப்ஸியை தொடர்ந்து அடுத்து களத்தில் இறங்க உள்ள சமந்தா!

  • நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன். 
  • இவர் தற்போது சமந்தாவிடம் கதை கூறி ஓகே வாங்கிவிட்டாராம்.

நயன்தாரா முன்னணி வேடத்தில் நடித்து நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் மாயா. இந்த படத்தில் ஆரி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம் பேய் படமாகவும், அதே நேரத்தில் புதிய கதைக்களத்துடன் இந்த படம் அமைந்ததால் இப்படம் பெரிய வெற்றியை பெற்றது.

இப்படத்தை அடுத்து டாப்ஸியை வைத்து ஹிந்தி – தமிழில் இயக்கிய கேம் ஓவர் திரைப்படமும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. இப்படமும் நாயகியை மையமாக கொண்டு திகில் கலந்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

இப்படத்தை அடுத்து மீண்டும் நாயகியை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ள ஒரு கதைக்களத்தை உருவாக்கி நடிகை சமந்தாவிடம் கூறியுளளாராம். அவரும் ஓகே செய்துவிட்டாராம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.