இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக..! சிருஷ்டி டாங்கே..!

நடிகை சிருஷ்டி டாங்கே  டார்லிங் ,முப்பரிமாணம் மற்றும்  தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தவர். இவர் அடுத்ததாக தமிழில் “கட்டில்” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை யமுனா படத்தில் பிறகு  கணேஷ்பாபு இயக்கி நடிக்க உள்ளார்.
இதுபற்றி சிருஷ்டி டாங்கே கூறுகையில் , “கட்டில்” என்ற தலைப்பை வைத்து அந்த மாதிரி படம் என்று நினைக்க வேண்டாம். இது குடும்ப கதை கொண்ட படம் .குடும்பத்திற்கும் , பாரம்பரிய கட்டிலுக்கு நிறைய தொடர்பு உண்டு.
ஒரு நடுத்தர குடும்பத்தில் உள்ள உறவுமுறைகள் மற்றும் அவர்களுக்கு இடையே ஏற்படும் உணவு ரீதியான போராட்டம் தான் படத்தின் கதை. இப்படத்தில் கணேஷ் பாபுக்கு மனைவியாக நடிக்க உள்ளேன். மேலும் முதல் முறையாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவும் நடிக்கிறேன். சிலர் என்னிடம்  அதற்குள் அம்மாவாக நடிக்கிறீர்களா..? என கேட்டார்கள் .இந்தப் படம் ரிலீஸ் ஆகும்போது தெரியும் அதற்கான பதில் என கூறினார்.

author avatar
murugan