ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கருத்துக்களை முன் வைக்கிறேன் : நடிகர் சூர்யா

ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கருத்துக்களை முன் வைக்கிறேன் : நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு பல அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர்  ஒரு அறிக்கையினை பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, ஒரு குடி மகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன். கல்வியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்க்கருத்து வந்தபோது, ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துக்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி என அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube