முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வராக 3-வது முறையாக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை செயலகம் வந்து பொறுப்பேற்று கொண்டார். 

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.இதனால் நேற்று ராம்லீலா மைதானத்தில்  நடைபெற்ற விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார்.

கெஜ்ரிவாலுக்கு  துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அரவிந்த் கெஜ்ரிவாலுடன் 6 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.இந்நிலையில் இன்று டெல்லி முதலமைச்சராக  3வது முறையாக பதவியேற்ற ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை செயலகம் வந்து பொறுப்பேற்று கொண்டார்.