#BREAKING: ஆம் ஆத்மியின் சட்டமன்ற குழுத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு

ஆம் ஆத்மியின் சட்டமன்ற குழுத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ஆம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் ஆம் ஆத்மியின் சட்டமன்ற குழுத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.