3-வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் -அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் 3-வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல்   நடைபெற்று வருகிறது.ஆம் ஆத்மி, பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது. தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் சிவில் லைன்ஸ் வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,இன்று என்னுடைய குடும்பத்தினருடன் வாக்களித்தேன்.எனது மகன் முதல் முறையாக வாக்களித்துள்ளான். இளைஞர்கள் வாக்களிப்பதால் ஜனநாயகம் வலிமையடையும். டெல்லியில் 3-வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன் எனக்கூறினார்.