தமிழ் திரையுலகில் இரண்டாவது இன்னிங்ஸ் என சொல்வதைவிட பொறுமையாக காத்திருந்து கடுமையாக உழைத்து தற்போது நிலையான இடத்தை பிடித்துள்ளார் நடிகர் அருண்விஜய். அவர் தற்போது மாஃபியா, பாக்சர் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்,
அவர் அண்மையில் ஒரு பேட்டியில் தல அஜித் பற்றி கூறுகையில், ‘ என்னை அறிந்தால் படத்தில் அஜித் சார் உடன் நடித்தது நல்ல அனுபவம். என்றும், அவர் அந்த படம் முடிந்த பிறகும் என்னுடன் நட்பாக தற்போதும் பழகி வருகிறார் என்றும், தான் எவ்வாறு எந்த மாதிரியான படங்களை தேர்வு செய்கிறேன் என்பதை அஜித் தனது மேனேஜர் மூலம்கேட்டு விசாரித்து வருவதாகவும்.’ குறிப்பிட்டார்.