உடல்நிலை காரணமாக மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டாம் என பிரதமர் மோடிக்கு, நிதியமைச்சர் அருண் ஜெட்லீ கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லீ அவர்கள் கூறுகையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், ஓய்வெடுக்க விரும்புவதாகவும், அமைச்சரவைக்கு வெளியில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கட்சிக்கும், ஆட்சிக்கும் தேவையான உதவிகளை எப்போதும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.