அப்துல் கலாமின் பிறந்த நாள் விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு…!

அப்துல் கலாமின் பிறந்த நாள் விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் வருகின்ற 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்,தேசிய அளவில் தண்ணீர் பரிசோதனை திறன் போட்டி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
அதேபோல் தமிழக பள்ளி கல்வி இணை இயக்குனர் நாகராஜா முருகன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அதில் தமிழகத்தில் உள்ள 402 பள்ளிகளில் றைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அறிவியல் மற்றும் தண்ணீர் பரிசோதனை திறன் போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வி இணை இயக்குனர் நாகராஜா முருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment