கலைஞர் இன்றும் தேவைப்படுகிறார்-கீ.வீரமணி

நேற்று முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது.கருணாநியின் நினைவு  தினத்தையொட்டி நேற்று  காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது. முக்கிய தலைவர்கள் பலரும்  மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், கடைசி வரை உழைத்தவர், லட்சியத்தோடு வாழ்ந்ததால் தான் மறைந்தும் மறையாமல் உள்ளார் . கலைஞர் இன்றும் தேவைப்படுகிறார்,.அவரின் ஐம்பெரும் உறுதிமொழிகள் ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம் என்று தெரிவித்தார்.