கோப்பை யாருக்கு ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு

  • இன்று இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு  இடையிலான  3-வது  ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது.
  • இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.இன்று 3-வது  ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்நடைபெற உள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன் ), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே , ரவீந்திர ஜடேஜா, சைனி , குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹெசல் வுட் , ஆடம்  சம்பா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இன்று நடைபெறும் போட்டி இறுதிப்போட்டி என்பதால் இதில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.ஏற்கனவே தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.