பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி !

பாதுகாப்புத் துறை அமைச்சகம்  7லட்சத்து நாற்பதாயிரம் துப்பாக்கிகள் உட்படப் பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்குப் அனுமதி அளித்துள்ளது.

முப்படைகளுக்கும் ஆயுதங்கள் வாங்குவதற்குப் பாதுகாப்புக் கொள்முதல் குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க 7லட்சத்து 40ஆயிரம் துப்பாக்கிகள் வாங்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. துப்பாக்கிகளும் மற்ற ஆயுதங்களும் 15ஆயிரத்து 935கோடி ரூபாய்க்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆயுதக் கொள்முதல் குழு அனுமதி அளித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment