அரியலூரில் அவலம்..! இறந்தவர்களின் உடலை கழுத்தளவு நீரில் சுமக்கும் மக்கள்..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் நைனார் ஏரி உள்ளது .இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் கரை தான் மயான கோட்டைக்கு செல்லும் வழியாக உள்ளது.

இந்த ஏரியில் தண்ணீர் நிறைந்தால் இறந்தவர்களை  மயான கொட்டகைக்கு  கொண்டு செல்ல கழுத்தளவு தண்ணீரில் சுமந்து செல்கின்றன. நேற்று முன்தினம் கோசலம் என்ற மூதாட்டி ஒரு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். அவரது உடலை மயான கொட்டகைக்கு எடுத்து சென்றபோது நைனார் ஏரியில் நீர் இருந்ததால் கழுத்தளவு தண்ணீரில் இறந்தவர் உடலை பொதுமக்கள் தூக்கி சென்றனர்.

ஏரிகளின் வடிகால் இருக்கும் ஆபத்தான  பகுதியில் பயணம் செய்து உடலை அடக்கம் செய்தனர். இது குறித்து அதிகாரிகளிடம்  பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

author avatar
murugan