ஹெல்மெட் அணிந்து வந்தால் பெட்ரோல் இலவசம் – காவல்துறை வியூகம் !

ஹெல்மெட் அணிந்து வந்தால் பெட்ரோல் இலவசம் – காவல்துறை வியூகம் !

திருச்செந்தூரில் வாகன விபத்துகளை குறைக்கும் வகையிலும்,இருசக்கர வாகனங்களில் செல்வோர்  ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் காவல் துறை மற்றும் பெட்ரோல் அசோசியேஷன் இணைந்து ஜூன்-1 முதல் பெட்ரோல் போட வருவோர் நிச்சயம் ஹெல்மெட் உடன் வரவேண்டும் என்று புதிய முயற்சியை தொடங்கவுள்ளனர்.

இதன் ஒரு முன்னோட்டமாக இன்றைய தினம் “மகிழ்ச்சி நேரம்” என்ற தலைப்பில் காலை 9 மணி முதல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் போடா வருவோர்க்கு இலவசமாக 1 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது.மேலும் இதே போல் மாதம் ஒரு முறை காலை 9 மணி முதல் 12 மணி வரை வருபவர்களை கணக்கு எடுக்கப்பட்டு வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *