தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு! விசாரிப்பதிலிருந்து விலகிய நீதிபதி
தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு! விசாரிப்பதிலிருந்து விலகிய நீதிபதி
ஜெயலலிதா மறைவிற்கு பின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதன் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார் தினகரன்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ்குமார் ஓரி விலகியுள்ளார்.