சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ராமனியை மேகாலயா தலைமை நீதிமன்றத்திற்கு மாற்றினார்.அதை ஏற்காத தஹில் ராமனி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி என்பவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்.இவருக்கு ஆளுநர் பன்வாரிலால்  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

author avatar
murugan