எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் திமுக துணை நிற்கும்-மு.க.ஸ்டாலின்

ஒண்டி வீரன் நினைவு தினத்தையொட்டி  நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆங்கிலேய தளபதியை போராடி வெற்றி கண்டவர் ஒண்டி வீரன்.அதிமுக ஆட்சியில் பால் விலை 3-வது முறையாக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்வால், பால் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? என்றும்  கேள்வி எழுப்பினார்.

எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் திமுக துணை நிற்கும்.அதே போல்தான் காஷ்மீர் விவகாரத்திலும் திமுக போராட்டம் அறிவித்துள்ளது .நாங்குநேரி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.