சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடக்கம்

உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தொடங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.இது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்கு 5 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது.அதாவது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி   டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.இதனால்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில்  இன்று நடைபெற்று வருகிறது.உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் தரப்பில்  மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகியுள்ளார்.