டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று மதுரை திரும்பிய மேலும் 10 பேர் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை.!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 124 அதிகரித்துள்ளது. டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். அதில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 616 பேர் தாங்களாகவே முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று மதுரை திரும்பிய மேலும் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று ஒரே நாளில் மாநாட்டில் பங்கேற்ற வந்த 45 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்