இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலி..எண்ணிக்கை 124 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 124 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 லிருந்து 4,789 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 353 பேர் வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் :

மாநிலங்கள்  பாதிப்பு  குணமடைந்தவர்கள்  உயிரிழப்பு 
மகாராஷ்டிரா  868 56 48
தமிழ்நாடு  690 19 07
டெல்லி  576 21  07
தெலுங்கானா  364 35 07
கேரளா  327 58 02
உபி  305 21 03
ராஜஸ்தான்  288 21 03
ஆந்திரா  266 01 03
மத்திய பிரதேசம் 229 0 13
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்