பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்-பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும். சுபஸ்ரீ மரணம் உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வு ஆகும்.

பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஏற்படுத்திய தாக்கத்தை விட 100 நாட்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளார். மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது.ஆறு மொழிகள் படித்தாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.