கஜா புயலால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள்…! குழம்பிய பொறியியல் மாணவர்கள் …!தெளிவுப்படுத்திய அண்ணா பல்கலைக்கழகம்…!

கஜா புயலால் குழம்பிய பொறியியல் மாணவர்களுக்கு பதில் அளித்துள்ளது   அண்ணா பல்கலைக்கழகம்.

கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் , நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.நாளை நடைபெறவிருந்த தேர்வு வருகின்ற 24 ஆம் தேதிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இது மட்டும் அல்லாமல் 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

Image result for anna university exams

ஆனால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் தான் நடைபெறுமா இல்லையா என்று குழப்பத்தில் மாணவர்கள் இருந்து வந்தனர்.இதன் பின் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் .அதில் பொறியியல் தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் .மேலும் விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.இதனால்  குழப்பத்தில்  இருந்து மாணவர்கள் விடுபட்டுள்ளனர்.

Leave a Comment