அரசின் புதிய அதிரடி…!!!பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் 21 நாள்களில் தூக்குத் தண்டனை…!!! வருகிறது புதிய சட்டம்…!!!

அரசின் புதிய அதிரடி…!!!பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் 21 நாள்களில் தூக்குத் தண்டனை…!!! வருகிறது புதிய சட்டம்…!!!

  • பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், குற்றவாளிகளுக்கு 21 நாள்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில், ஆந்திராவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
  • சுருக்கமாக சொன்னால்  குற்றவாளிகளுக்கு 21 நாள்களுக்குள் தூக்குத்தண்டனை வழங்கும் வகையில், ஆந்திர சட்டமன்றத்தில் நாளை மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்த சட்டத்தின் படி, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்கப்படவுள்ளது.இந்த மசோதா குறித்து  ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிடுகையில் ,டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பெயரில் சட்டம் இயற்றியுள்ளோம். ஆனால், நிர்பயா கொல்லப்பட்டு 7 வருடங்கள் ஆகிவிட்டன.ஆனாலும், இப்போது வரை  அந்தக் குற்றவாளிகளை தூக்கிலிடவில்லை.

Image result for தூக்கு

பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை அளிப்பதே இந்த சமூகத்துக்கு நல்லது  என குறிப்பிட்டார். சமீபத்தில் தெலுங்கானாவில் திஷா என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  எரித்துக் கொல்லப்பட்டார். இதற்குக் காரணமான நாங்கு  குற்றவாளிகளை  போலீஸார் என்கவுன்டர் செய்தனர். திஷா கொலையாளிகளை என்கவுன்டர் செய்ததற்காக, சந்திரசேகர ராவ் அரசுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. இந்த நிலையில், ஆந்திராவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், ஒரே வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளியை  தூக்கிலிடப்படும். இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube