அவங்க எல்லாம் ஆட்சி அமைக்கவா? பாமகவ தொடங்கனோம்! வெடித்த அன்புமணி

அவங்க எல்லாம் ஆட்சி அமைக்கவா? பாமகவ தொடங்கனோம்! வெடித்த அன்புமணி

தமிழகத்தில் பிற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்காக நாங்கள் கட்சி தொடங்கவில்லை என்று பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் பாமக கட்சியின் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட அன்புமணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில் கட்சி தொடங்குகின்ற அத்தனைபேரும் அடுத்தது எங்கள் ஆட்சிதான் என்று சொல்லி வருவார்கள். நாங்கள் பாமகவை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது.  அ. தி.மு.க , தி.மு.க., காங்கிரஸ் , போன்ற கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு  நாங்கள் கட்சியை தொடங்கவில்லை. எங்கள் கட்சி ஆட்சி அமைப்பதற்காக தான் நாங்கள் கட்சியை தொடங்கினோம் .வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமோ அல்லது இல்லையா ? அப்படி இருந்தால் யாருடன் இருப்போம் என்பதையெல்லாம் தேர்தலுக்கு முன் பாமக  நிறுவனர் ராமதாஸ் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

author avatar
kavitha
Join our channel google news Youtube