7 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுப்பதாக கூறி அத்துமீறிய முதியவர் கைது.!

திருமங்கலம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 59 வயது முதியவர் கைது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் குருசாமி இவர் தனது வீட்டு பக்கத்தில் உள்ள ஏழு வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்கள் அளித்த புகாரின் பெயரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் செய்தனர். இந்த சமபவம் அந்த ஊரில் பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.