எச்சரிக்கை.. நாளை கரையை கடக்கும் ஆம்பன்! மணிக்கு 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசும்..!

சூப்பர் புயலாக வலுப்பெற்ற ஆம்பன் புயல், அதிதீவிர புயலாக மாறி, நாளை மாலை வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது மேலும் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறி, கொல்கத்தாவிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் மேற்கு மத்திய வங்க கடலில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல், 6 மணிநேரத்தில் 16 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்கிறது. மேலும், இது அதே திசையில் நகர்ந்து, நாளை மாலை வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையே நாளை கரையை கடக்கும்.

இந்த புயல், மேற்கு மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலில் சராசரியாக 150-160 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலால் ஒடிசா , மேற்கு வங்கத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.