மேகதாது அணை: உடனே அனுமதி வழங்க பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை.!

விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க அனுமதிக்க வேண்டும்- எடியூரப்பா கோரிக்கை.

மேகதாது அணைக்கு உடனே அனுமதி வழங்க டெல்லியில் பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற நான்காவது நாளான மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடியை 15 நிமிடங்கள் சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்