காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான்  அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது-காங்கிரஸ்  எம்.பி ஹரிபிரசாத் 

கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான்   அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது என்று  காங்கிரஸ்  எம்.பி ஹரிபிரசாத்  தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காய்ச்சல் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக   தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related image

 

இந்நிலையில் அமித் ஷா தொடர்பாக காங்கிரஸ்  எம்.பி ஹரிபிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது.இந்த அரசை வேறு ஏதாவது செய்ய முயற்சித்தால் அவருக்கு பிற வியாதிகளும் வந்து சேரும்’ என்று பரபரப்பாக காங்கிரஸ்  எம்.பி ஹரிபிரசாத்   கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment