அமெரிக்கா தெற்கு டெக்சாசில் விமான விபத்துக்குள்ளானதில் இருவர் பலி!

இருவர் அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில்  உயிரிழந்தனர். தெற்கு டெக்சாசில் உள்ள லரேடோ (Laredo) நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை சிறிய ரக விமானத்தில் புறப்பட்டனர்.

விமானம் டேக் ஆஃப் ஆன சில வினாடிகளில் எஞ்சினில் புகை வந்ததையடுத்து விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் விமானநிலையத்துக்கு அருகில் உள்ள புல்வெளியியில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment