அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடக்கம் ! குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடங்கியது.

நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிக்க  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்தார்.மேலும்  அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக அவர் சென்னை சென்றார்.

தற்போது அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடங்கியது.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.