மாசி திருவிழா கொடியேற்றம்…நத்தம் மாரியம்மன் கோவிலில் வெகுசிறப்பு

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொசியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கியது.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவானது ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி இவ்வாண்டும் கொடியேற்றத்துடத்தோடு மாசி  திருவிழா தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி காலையில் 9.35 மணிக்கு மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தி, கோவில் முன் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.கொடிமரத்தில், நாணல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்த அம்பாள் மாரியம்மன் திருஉருவம் பொறித்த கொடிமரத்திற்கு பூஜை நடத்தப்பட்டது பின்னர் தீபாராதனைகள் நடந்தது. கோவில் மூலவராக காட்சிதரும் தாய் மாரியம்மன், வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பரவசம் பொங்க அருள்காட்சி அளித்தார்.அப்பொழுது பக்தர்கள் பக்தி பெருக்கில் ஒம்சக்தி ஆதிபாரசக்தி என்று கோஷமிட்டுனர்.

author avatar
kavitha