அதிமுக வேட்பாளர்கள் 3 பேரும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தனர்.!

தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வருகிற 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த இரு 3 நாளுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் 3 பேரும் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர். பின்னர் 3 பேரும் மனு தாக்கல் செய்ததும் அவர்களுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி. அன்பழகன், ராஜலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் காலியாக உள்ள பதவிகளுக்கு 6 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்