இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கும் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது.
இடைக்கால பொது பட்ஜெட் நாளைய தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரை அவையில் சுமூகமாக நடத்த இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி நடைபெற்றது.
இன்று நடைபெற்ற அனைத்துகட்சிக்கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, திர்ணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்,புதிதாக ஏதேனும் முக்கிய மசோதாக்களை அரசு அவசர கதியில் நிறைவேற்ற கூடாது என்று உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.