வீட்டிலிருந்து வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு சூப்பர் ஆஃபர்களை அறிவித்த ஏர்டெல்.!

வீட்டிலிருந்து வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு சூப்பர் ஆஃபர்களை அறிவித்த ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனம் தற்போது 251 ரூபாய் மற்றும் 98 ரூபாய்க்கு சிறப்பு டேட்டா சலுகைகளை எந்தவித காலவரையறை வரம்புகள் இன்றி  வழங்கி வருகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்போது சில தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளனர். 

இதனால், பல்வேறு தொலைத்தொடர்பு நெட் வொர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு டேட்டா ஆஃபர்களை அறிவித்து வருகிறது.

அதன்படி, ஏர்டெல் நிறுவனமும் தற்போது சிறப்பு டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. ரூபாய் 251 மற்றும் 98 ரூபாய்க்கு டேட்டா சேவைகளை வழங்கி வருகிறது. 251 ரூபாய்க்கு 50 ஜிபி டேட்டா எந்தவித கால வரையரம்பும் இன்றி அளிக்கப்படுகிறது. அதே போல 98 ரூபாய்க்கு 12 ஜிபி டேட்டா எந்தவித காலவரையறை இன்றி வழங்கப்படுகிறது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube