ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு !ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்றது .இந்த விசாரணையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் அமலாக்கத் துறை மனு குறித்து நவம்பர் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மனு மீதான விசாரணையை நவம்பர் 29-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.